ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மின் கடத்திகளின் மூலம் இயங்கு இயங்கு மின்னியலைக் கொண்டு செல்லாம். மின் கடத்தி ஒன்றில் மின்னோட்டம் நிகழ்கிறது என்றால் உண்மையில் அது மின் அணுக்களின் ஓட்டமே ஆகும். உயர் மட்டத் தொட்டியில் இருக்கும் தண்ணீர் குழாய் வழியாக கீழ்மட்டத் தொட்டிக்குப் பாய்வது போன்றே மின்சாரமும் உயார் அழுத்தமுள்ள ஒரு முனையிலிருந்து, தாழ்ந்த அழுத்தமுள்ள மற்றொரு முனைக்கு பாய்கிறது. இந்த மின் அணுக்களின் ஓட்டத்தையே மின்னோட்டம் என்கிறோம். இதனையே நாம் இயங்கு மின் இயல் என்கிறோம்.