மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !
Showing posts with label டயோடு மற்றும் ஜீனர் டயோடு. Show all posts
Showing posts with label டயோடு மற்றும் ஜீனர் டயோடு. Show all posts

டயோடு மற்றும் ஜீனர் டயோடு பற்றிய தெளிவான விளக்கம் (What is Diode and Zener diode?)


டயோடு:

AC மின்சாரம் DC மின்சாரமாக மாற்றுவதற்கு டயோடுகள் பயன்படுகிறது. Resistor, capacitor களைப் போல டயோடுகளிலும் இருமுனை கம்பிகள் இருக்கும். இதில் ஒரு முனை ஆனோடு மற்றொரு முனை கேத்தோடு ஆகும்.

டயோடுகளின் கேதோடு முனையை அடையாளம் கண்டுகொள்வதற்காக கோடு அல்லது புள்ளி குறிக்கப்பட்டு இருக்கும். இதில் புள்ளி அல்லது கோடு குறிக்கப்படாத பகுதி ஆனோடு ஆகும்.


நாம் இந்த டயோடின் ஆனோடு பகுதியை AC மின்சாரத்தில் இனைத்தால் கேதோடு பகுதிக்கு பாஸிடிவ் மின்சாரம் கிடைக்கும். நாம் இந்த டயோடின் கேதோடு பகுதியை AC மின்சாரத்தில் இனைத்தால் ஆனோடு பகுதிக்கு நெகடிவ் மின்சாரம் கிடைக்கும்.

AC மின்சாரம் ஒரு நொடிக்கு 50 முறை பாஸிடிவாகவும் 50 முறை நெகடிவாகவும் மாறி மாறி கிடைக்கும். இதைத்தான் நாம் 50 Hz frequency என்கிறோம். இப்படி மாறி மாறி வரும் மின்சாரத்தை டயோடுகள் மூலமாக நெகடிவ் மின்சாரத்தை தணியாகவும் பாஸிடிவ் மின்சாரத்தை தணியாகவும் பிரித்து விடலாம்.

மேலும் டயோடுகளை பயன்படுத்தி ரேடியோ டிவிகளில் மின் அலைகளையும் பிரிக்கலாம்.

ஜீனர் டயோடு:





டிவி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் DC மின்சாரம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் அதிகரித்தால் டிவி, கம்ப்யூட்டர் ஆகியவை மிகுந்த பதிப்புக்கு உள்ளாகும்.


ஆகவே இது போன்ற இடங்களில் ஜீனர் டயோடு பயன்படுத்தப்படுகிறது. மின்னனுவியல் சாதனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மின்சாரம் அதிகரிக்கும் போது அந்த அதிகரித்த மின்சாரம் இந்த ஜீனர் டயோடு வழியாக எர்துக்கு சென்றுவிடும்.
ஆகவே மின்னனுவியல் சாதனங்கள் பாதிக்கப்படுவதில்லை


                                                   

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.