மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !
Showing posts with label எர்த் பற்றிய தெளிவான விளக்கம் what is earth?. Show all posts
Showing posts with label எர்த் பற்றிய தெளிவான விளக்கம் what is earth?. Show all posts

எர்த் பற்றிய தெளிவான விளக்கம் (what is earth?)

மின்சாரம் பல நேரங்களில் உலோக பெட்டிக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மெயின் switch, மீட்டர், இரும்பு குழாய்கள், அயர்ன்பாஸ், கிரைண்டர், மின்மோட்டார்கள், மின்விசிரி போன்ற பொருள்களின் வெளிப்புறம் (body) உலோகம் ஆகும்.




இந்த மின்சாதனங்களின் உள் பகுதியில் மின்சாரம் செல்லும் போது எதிர்பாராத விதமாக இதன் பாடியில் மின்சாரம் பாய்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அப்போது நாம் அந்த மின்சாதனங்களை தொட்டால் ஷாக் அடிக்கும்.


இது போன்ற ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக இதன் பாடியில் எர்த் இணைப்பு கொடுப்பார்கள். பூமியில் சுமார் ஒரு சதுரடி அகலத்தில் பள்ளம் வெட்டி அதில் இரும்பு பைப்பை அடித்துவிட்டு அதன் மேல்புறம் எர்த் கம்பியை இணைப்பார்கள்.



மின்சாரம் மின்சாதனங்களின் பாடியில் பாயும் வாய்ப்பு ஏற்பட்டால் அந்த மின்சாரம் வேகமாக இந்த எர்தின் வழியாக பூமிக்கு சென்று விடும்.



இந்த எர்த் பகுதியில் பூமிக்கு உள்ளாக இனைக்கப்பட்டுள்ள கம்பியை நன்றாக இறுக வைக்க உப்பு, கரி, தண்ணீர், நன்றாக ஊற்ற வேண்டும்.



இந்த எர்த் ஆனது மனிதனை விட மிசின்களுக்கு தான் மிகவும் பாதுகாப்பனதாக இருக்கும். ஆகவே கண்டிப்பாக இந்த எர்த் இணைப்பை அணைவரின் வீடுகளிலும் கொடுக்க வேண்டும்.





குறிப்பு:


ஒரு கம்பியில் உள்ள எர்த் இணைப்பு நன்றாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு பல்பின் பேஸ் (+Ve), நியூட்ரல் (-Ve) வோயருக்கு எப்படி மின் இணைப்பு கொடுத்தால் பல்பானது எரிகிறதோ அதேபோல் பேஸ்க்கும் (+Ve), எர்துக்கும் (Gnd) மின் இணைப்பு கொடுத்தால் பல்பானது எரிய வேண்டும் அப்படி எரிந்தால் எர்த் இணைப்பானது மிகவும் நன்றாக உள்ளது என்று அர்த்தம்.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.