மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

About Me




அனைத்திலும் சமத்துவத்தை மட்டும் விரும்பும் சராசரி இளைஞன்:

                                                 பெயர்                :    ம.பாண்டியராஜன் 
                                                 தந்தை                :    வே.மதியழகன்
                                                 பிறந்த ஊர்        :    நெய்வத்தளி கிராமம்
                                                 வளர்ந்த இடம்  :    மறமடக்கி கிராமம் (அம்மா பிறந்த இடம்)
                                                 கல்வித் தகுதி     :    பொறியியல் பட்டம்
                                                 மொழி                :    தமிழ், ஆங்கிலம் எழுதி படிக்கும் அளவிற்கு.

தொடர்பு கொள்ள:

                                                 Gmail               :   mathimozhi.info@gmail.com
                                                 Ymail                 :    m.rajan7@ymail.com
                                                 Face Book      :   pandiya.rajan.923@facebook.com
                                                 Website           :   http://electricaltamil.blogspot.in

வணக்கம்,
                   நான் பொறியியல் படிக்கும் போது மின்னியல் தொடர்பாக தெரிந்து கொள்ள இணையத்தை பயன்படுத்துவது வழக்கம். அப்பொழுது மின்னியல் தொடர்பாக கட்டுரைகளை யாரும் தமிழில் எழுதவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். 

எதிர்கால சந்ததியினர் மின்னியல் தொடர்பாக இணையத்தை பயன்படுத்தும் போது இந்த தளம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்துடன் மின்னியல் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை தமிழில் எழுதத் தொடங்கினேன்.

நான் எழுதிவரும் அனைத்தும் நான் படித்து தெரிந்து கொண்ட மற்றும் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்டவையாகும். இதை நான் சுமையாக நினைக்காமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எனக்கு நேரம் கிடைக்கும் போது எழுதி வருகிறேன்.

தொழில்நுட்பம் தான் இந்த உலகத்தை ஆளப்போகிறது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். எனவே அதை அவர்களுடைய சொந்த மொழியில் கற்றுத் தேர்வதே மிகச் சிறந்தது ஆகும்.

உலகத்திலேயே மிகப் பெரிய ஆயுதமாக நான் நினைப்பது இரண்டே இரண்டு அன்பு, பொறுமை இவை ஒருவருக்கு அமையப்பெற்றால் அவர் அனைவராலும் மதிக்கப்படுவர். 

வாழ்க மனிதநேயம் !            வளர்க பகுத்தறிவு !


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.