மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

1] கூடங்குலம் அணுமின் நிலையம்


       கூடங்குலம் அணுமின் நிலையத்தை நம்மைப் போன்ற படித்தவர்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.நண்பர்களே இதிலும் அரசியல் நண்பர்கள் விளையாடிதான் கொண்டிருக்கிறார்கள் நாம் அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.மக்களை நன்றாக தூண்டிவிடுகிறார்கள். தமிழக அரசும் கண்டுகொள்வதே கிடையாது.இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துக்கலாமே சொன்ன பிறகு என்ன தயக்கம்.
இதன் வடிவமைப்பு 177 மடங்கு முல்லைப் பெரியார் அணைக்குச் சமமாகும் என்று சர்வே சொல்கிறது.இந்த மின்னிலையம் மட்டும் வந்து விட்டால் தமிழகதிற்கு மின்சார பற்றாக்குறையே 180  வருடத்திற்கு வரவே வராது. ஆகவே நண்பாகளே  நம்மைப் போன்ற படித்தவர்கள் கண்டிப்பாக மக்களிடம் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசியல் நண்பர்கள் அனைவருமே இதை ஆதரிக்க வேண்டும்.இது என் பணிவான வேண்டுகோள். விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.......................

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.