மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

1] UPS என்றால் என்ன? INVERTER என்றால் என்ன?

பொதுவாகவே நமக்கு ஏற்படும் முதல் குளப்பம் UPS என்றால் என்ன? INVERTER என்றால் என்ன?


UPS (Uninterrupted Power Supply- தடையின்றி  மின் சப்ளை)


வீடுகளில் மின்சாரம் நிற்கும் சமயங்களில் இந்த UPS-சின் உள் இருக்கக் கூடிய மின்கலம் என்று சொல்லக்கூடிய battery அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது. மேலும் இதை DC சப்ளை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படும்.


உ.த : கணினி மற்றும் அனைத்து எலக்டிரானிக்ஸ் உபகரணங்களிலும் பயன்படுதப்படும்.


INVERTER 


இது நம் வீடுகளில் பயன்படுத்தும் AC சப்ளை மூலியமாக inverter-ரின் உள் இருக்கக் கூடிய battery ஆனது AC சப்ளை DC சப்ளையாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது. பிறகு battery-யில் சேமிக்கபட்ட DC சப்ளையானது AC சப்ளையாக மாற்றப்பட்டு அனைத்து AC உபகரணங்களிலும் பயன்படுகிறது.


உ.த : Fan, Light மற்றும் வீடுகளில் பயன்படுத்தக் கூடிய அனைத்து எலக்டிரிக்கல் உபகரணங்களிலும்...........  

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.