மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்தடையின் (Resistor) மதிப்பு காணல்


மின்தடை (resistor) அளவில் மிகச்சிறியதாக இருப்பதால் இது மின்னோட்டத்திற்கு தரும் தடை மதிப்பு மற்றும் tolerance ஆகியவற்றை நேரடியாக எழுதாமல் கலர் வளையங்களில் (color band) மூலம் காட்டப்பட்டிருக்கும்.



இதில் மொத்தம் நான்கு color band கள் உள்ளன.
1 Band ஆனது மின்தடையின் முதல் இலக்க மதிப்பையும்.
2 Band ஆனது மின்தடையின் இரண்டாம் இலக்க மதிப்பையும்.
3 Band ஆனது multiplier எனப்படும். இது மேற்கூறிய Band 1 மற்றும் Band 2 தரும் மின்தடையின் இலக்க மதிப்புடன் எத்தனை எண்ணிக்கையை உடைய zero சேர்க்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறது.
4 Band ஆனது மின்தடையின் tolerance எவ்வள்ளவு என்பதைக் காட்டுகிறது.


1 Band        2 Band      3 Band        4 Band
Yellow         violet          Red              Silver
||                    ||                  ||                     ||
4                      7                   2                   10%
                                    *10^2=100
                                 (Redன்மதிப்பு 2
                              ஆதலால் 2 zero சேர்க்க
                                   வேண்டும்.)

எனவே இப்பொழுது மின்தடையின் மதிப்பு = 47*100 = 4700ஓம் = 4700 ohm
or 4.7 kilo ohm ஆகும். (1000 ஓம் என்பது 1கிலோ ஓம் ஆகும். எனவே ஓமை 1000தால் வகுத்தால் கிலோஓம் கிடைக்கும்.)


10% tolerance என்பது 4700*10/100 = 470 ஓம் ஆகும்.
எனவே மின்தடையின் actual மதிப்பு 4700+470 = 5170 ஓம் க்கும் ( 5.17 kilo ohm)
4700-470 = 4230 ஓம் க்கும் (4.23 கிலோஓம் ) இடையில் இருக்கலாம் என்று பொருள்.


பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.