மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்மாற்றி தொடர்-6 (Transformer -6)

ஒரு மின்மாற்றியில் ஏற்படக்கூடிய இழப்புகள் (Losses of Transformer):
1.இரும்பு பாகமாக இருக்கக்கூடிய core -ல் ஏற்படும் இழப்புகள் - Iron Losses or Core Loss
2.Core -ல் சுற்றப்பட்டுள்ள வைண்டிங்குகள் எனப்படும் செம்புக்கம்பிகளில் மின்னோட்டம் பாயும் போது ஏற்படும் இழப்புகள் - Copper Loss

Iron Loss or Core Loss:

மின்மாற்றியின் core ஆனது இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். மேலும் இது AC supply யின் மூலமாக வைண்டிங் சுற்றப்பட்டுள்ள காந்த புலத்தை தோற்றுவித்து செயல்படுவதால் இதில், Hysteresis Losses மற்றும் Eddy Current Losses ஆகிய இருவகை இழப்புகள் தோன்றுகின்றன.
கவனிக்க:
நண்பர்களே நான் கூறிய வைண்டிங்கின் உள் மின்தடை இழப்பு என்றால் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு மின்னோட்டம் செல்லக்கூடிய கம்பிகளிலுமே குறிப்பிட்ட அளவு மின்தடையானது இருக்கும். இதனையே நாம் Internal Resistance என்கிறோம்.
அதாவது:
Iron Losses = Hysteresis Loss + Eddy Current Loss ஆகும்.
இந்த Loss ஐ மின்மாற்றியின் திறந்த மின்சுற்று சோதனை (Transformer Open Circuit Test) மூலமாக கண்டுபிடிக்கலாம்.

செம்புக்கம்பி இழப்புகள் (Copper Loss):

மின்மாற்றியின் வைண்டிங்குகளில் மின்னோட்டம் பாயும் பொழுது அந்த வைண்டிங்கின் உள் இருக்கக்கூடிய மின்தடையினால் ஏற்படும் வெப்ப இழப்புகளே Copper Loss எனப்படும்.
அதாவது,
மின்னோட்டம் மற்றும் மின்தடை இவையிரண்டும் சேர்ந்து ஒரு வைண்டிங்கில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது இதனையே வெப்ப இழப்பு என்கிறோம்.
இந்த copper loss ஆனது மின்மாற்றியின் இரண்டு வகையான வைண்டிங் அமைப்புகளிலுமே ஏற்படும்.
அதாவது,
copper loss மின்மாற்றியின் Primary மற்றும் Secondary வைண்டிங் இரண்டிலுமே ஏற்படும்.
இதனையே,

இந்த Loss ஆனது மின்மாற்றியுடன் இணைக்கப்படும் Load ஐப் பொறுத்து மாறுப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே, இதை variable loss என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் இந்த copper loss ஐ மூடிய மின்சுற்றின் மூலமாக (short circuit) கண்டறியலாம்.




பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.