மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

Single Phase Preventor- ன் அவசியம் மற்றும் மோட்டாரில் ஏற்படும் இரண்டு பழுதுகள்

இதன் அவசியம்:
3 பேஸ் மோட்டார்களை இயக்குவதற்கு எப்படி ஸ்டார்ட்டர் பயன்படுகிறதோ அதே போன்று தான் இந்த சிங்கிள் பேஸ் பிரிவெண்டர் ஒரு அவசியமான எலக்ட்ரானிக் சாதனமாகும்.
சிங்கிள் பேஸிங்(Single Phasing):
மூன்று பேஸ்களில் மோட்டார் இயங்கும் போது எதிர்பாராதவிதமாக ஒரு பேஸ் மட்டும் இல்லை என்றால் மீதி இரண்டு பேஸ்களில் அதிகப்படியான கரண்டை எடுக்கும். அந்த சூழ்நிலையில் மோட்டார் காயிலானது வெந்து போகும். இவ்வாறு 3 பேஸ்களில் ஒன்றை மட்டும் இழந்து மற்ற இரண்டு பேஸ்களில் மோட்டார் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாவதைத்தான் "சிங்கிள் பேசிங்" என்கிறோம்.

மோட்டாரானது இரண்டு விதத்தில் பழுது ஏற்படுகிறது :
1.ஓவர்லோடு.
2.சிங்கிள் பேசிங்.
இந்த பழுதை தவிற்பதற்காகதான் நாம் பெரும்பாலும் மோட்டார்களில் ஸ்டார்டர்களை பயன்படுத்துகிறோம்.

ஓவர்லோடு(Overload):
மோட்டார் பம்பு செட்டில் உண்டாகும் மெக்கானிக்கல் பிழைகளால் அதிக கரண்ட் இழுத்து, காயில் வெந்து போகும் நிலை ஏற்படும் இதற்கு பெயர்தான் ஓவர்லோடு.

சிங்கிள் பேசிங் பாதுகாப்பு:
சிங்கிள் பேசிங்கினால் (Single phasing prevention) அதிகமாகுகின்ற ஓவர்லோடு கரண்டினை ஸ்டார்ட்டரில் உள்ள ஓவர்லோடு ரிலே (OverloadRelay) கணிக்கும் நேரத்திற்குள் இந்த எலக்ட்ரானிக் சிங்கிள் பேசிங் பிரிவெண்டர் கணித்து உடனடியாக (Instant Tripping) மின்சப்ளையை துண்டித்து விடுவதால் மோட்டார் காயிலுக்கு அதிக பதுகாப்பு கிடைக்கிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.