மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

ஒலி அலை (Sound Waves) மற்றும் ஒலி மின் அலைகள் (Audio) பற்றிய தெளிவான விளக்கம்


ஒலி அலை (Sound Waves)

நாம் பேசும் போதும் பாடும் போதும் சாலைகளில் வாகனங்கள் செல்லும் போதும் காற்றானது அதிர்வு அடைந்து அலைகளாக மாற்றமடைந்து பரவுகிறது.
இந்த அலைகள் தான் நமது காதுகளில் ஒலி அலைகளாக கேட்கிறது.



ஒலி அலையின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் ஆகும். ஒலி அலையின் அதிர்வு (frequency) 20 to 2000 சைகிள் ஆகும். ஒலி அலைகள் மைக் மூலமாக ஒலி மின் அலைகளாக மாற்றப்படுகிறது. ஒலி மின் அலையின் அதிர்வு (frequency) 20 to 2000 சைகிள் ஆகும்.

மேலும் ஒலி மின் அலையின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ.ஆகும்.

ஒலி மின் அலைகள் (Audio Waves)

நாம் ஒருவரிடம் பேசும் போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும் தான் பேசமுடியும் . அறந்தாங்கியில் இருக்கும் ஒருவர் எவ்வளவு சத்தமாகப் பேசினாலும் புதுக்கோட்டையில் இருக்கும் மற்றொருவருக்கு கேட்காது. காரணம் நாம் பேசும் போது உண்டாகும் ஒலி அலைகள் குறிப்பிட்ட தூரத்தில் சென்று மறைந்து விடும். எனவே இந்த ஒலி அலைகளை ஒலி மின் அலைகளாக மாற்றிவிட்டால், இந்த ஒலி மின் அலைகள் கம்பிவழியாக உலகம் முழுவதும் ஒரு நொடியில் சென்றுவிடும்.




நாம் தொலைபேசியில் பேசும் போது நமது உரையாடல்கள் ரிஸீவரில் உள்ள மைக் மூலமாக ஒலிமின் அலைகளாக மாற்றம் அடைந்து கம்பி மூலமாக அடுத்தவருக்கு செல்கிறது. இதுவே ஒலி மின் அலைகள் எனப்படும். இந்த ஒலி மின் அலையின் வேகம் ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ.ஆகும். எனவே தான் நம்மால் உலகம் முலுவதும் எளிதாகப் பேசமுடிகிறது.




நாம் மைக் முன்னாடி நின்று பேசும் போது இந்த மைக்கானது நமது பேச்சை ஒலிமின் அலைகளாக மாற்றிவிடுகிறது. பிறகு இந்த ஒலி மின் அலைகள் மைக் ஒயர்களின் மூலமாக ஆம்ளிபயர் பெட்டிக்கு சென்று விடுகிறது. ஒலி மின் அலைகள் ஆம்ளிபயரில் பல மடங்கு விரிவாக்கப்பட்டு ஸ்பீக்கருக்கு செல்கிறது. ஸ்பீக்கரில் இந்த ஒலி மின் அலைகள் ஒலி அலைகளாக மாற்றம் அடைந்து நமது காதுக்கு கேட்கிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.