மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

கப்பாசிட்டரை சோதித்து பார்த்தல்

கப்பாசிட்டர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்க்க பல முறைகள் இருந்தாலும் 'ஓம் மீட்டர் முறைதான்' பரவலாக உள்ளது.

ஓம் மீட்டர் முறை (Ohm meter method)




ஓம் மீட்டரில் உள்ள இரண்டு டெர்மினல்களை கப்பாசிட்டரின் இரண்டு டெர்மினளுடன் இணைக்கும் போது ஓம் மீட்டரின் அளவைக் காட்டும் முள்ளானது பூஜ்ஜியத்தின் பக்கம் நகர்ந்து பின்பு மெதுவாக அதிகபட்ச அளவிற்கு வரவேண்டும். இவ்வாறு நடந்தால் கப்பாசிட்டரானது நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

திடிரென்று ஓம் மீட்டரின் முள்ளானது அதிகபட்ச அளவிற்கு செல்லாமல் நடுவே நின்று விட்டால் கப்பாசிட்டரில் மின்கசிவு உள்ளதாக அர்த்தம்.



ஓம் மீட்டரின் முள்ளானது தொடர்ந்து பூஜ்ஜியத்தைக் காட்டினால் கப்பாசிட்டர் ஷாட் (Short) ஆகிவிட்டது என்று அர்த்தம்.

ஓம் மீட்டரின் முள்ளானது சுத்தமாக நகரவே இல்லையெனில் கப்பசிட்டர் ஓப்பன் (Open) ஆகிவிட்டது என்று அர்த்தம்.

ஸ்குரு ட்ரைவர் மூலம் கப்பாசிட்டரை சோதிக்கலாம்




முதலில் கன்டன்சருக்கு டி.சி சப்ளை (பாட்டரி மூலம்) கொடுக்க வேன்டும். பிறகு கன்டன்சரானது சார்ஜ் ஆகும். அதற்குப் பிறகு ஸ்குரு ட்ரைவரை எடுத்துக் கொண்டு கப்பாசிட்டரின் இரண்டு டெர்மினல்களில் மீது வைக்கும் போது மின் தீப்பொறி ஏற்படும் அப்படி ஏற்ப்பட்டால் கப்பசிட்டரானது நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம். மின் தீப்பொறி ஏற்படாவிட்டால் காப்பாசிட்டர் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.  

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.