மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

ஒளி மின் அலைகள் மற்றும் ரேடியோ அலைகள் (Radio Frequency)


நாம் பேசும் போது மைக்கில் இருந்து கிடைப்பது ஒலிமின் அலைகள். நிகழ்ச்சிகளை படம் பிடிக்கும் போது வீடியோ கேமராவில் இருந்து கிடைப்பது ஒளி மின் அலைகள் ஆகும். டி.வி.யில் இந்த ஒலிமின் அலையும், ஒளிமின் அலையும் சேர்த்து சொல்ல வேண்டுமானால் வீடியோ அலை என்று சோல்ல வேண்டும். ஒலிமின் அலையை மட்டும் தனியாக சோல்ல வேண்டுமானால் ஆடியோ அலை என்று சொல்ல வேண்டும்.

ரேடியோ அலை:
ரேடியோ அலைகளை, வான் அலைகள் என்றும், கேரியர் வேவ்ஸ் என்றும் சொல்லலாம். இந்த அலை வானவெளியில் பரவிச் செல்வதால் வான் அலை என்றும், ஒலி, ஒளி மின் அலைகளை சுமந்து செல்வதால் கேரியர் வேவ்ஸ் என்றும் சொல்லலாம்.

இந்த ஒலி மின், ஒளி மின் முதலிய அலைகள் தானாக காற்றில் கலந்து செல்லாது. காற்றில் பரவக்கூடிய சக்தி இந்த அலைகளுக்கு இல்லை. ஆகவே ஒலி மின், ஒளி மின் அலைகளை ரேடியோ அலையில் ( Radio frequency) கலந்து அனுப்புகின்றனர். ரேடியோஅலைகள் மற்ற அலைகளை சுமந்து காற்றில் பரவிச் செல்லும்.
ஒயர்லஸ், செல்போன் போன்ற சாதனங்களிலும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது ரேடியோ ஆகும். அந்த காலகட்டத்தில் ரேடியோவிற்கு மட்டும் ரேடியோ அலைகள் பயன்பட்டதால் இது ரேடியோ அலை என்று சொல்லப்பட்டது.

ரேடியோ அலை என்பதை சுருக்கமாகR.Fஎன்று சொல்லப்படுகிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.