மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

சிங்கிள் ஃபேஸ் இன்டக்சன் மோட்டார். (Single Phase Induction motor)

230 வோல்ட் AC சிங்கிள் ஃபேஸ் மின்சப்ளையில் செயல்படுத்தும்படி அமைக்கப்பட்ட மோட்டாரை இது குறிக்கும். வீட்டில் உள்ள மோட்டார், மின்விசிறி, பம்ப், மாவு அரைக்கும் மெஷினில் உள்ள மோட்டார், ரெப்ரிஜிரேட்டர் மோட்டார் போன்றவை சிங்கிள் ஃபேஸ் இண்டஷன் மோட்டார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே!


3ஃபேஸ் மோட்டாரின் ஸ்டேட்டாருக்கு மின் சப்ளை வழங்கும் போது ஒரு சுழலும் காந்தப்புலம் ஏற்படுவதால் அதை விரட்டிக் கொண்டே ரோட்டார் என்ற சுழலும் பாகமும் சுற்றுகிறது. சிங்கிள் ஃபேஸ் வைண்டிங்கிள் சிங்கிள் ஃபேஸ் சப்ளை தரும் போது காந்தப்புலம் உண்டாகுமே தவிர சுழலும் காந்தப்புலம் ஏற்படாது.



எனவே சுழலும் பகுதியான ரோட்டாரானது தானே சுழலத் துவங்காது. அதை கையினால் சுழற்றி விடுவதன் மூலமோ அல்லது வேறு ஏதாவது வகையில் சுழலத் துவங்கும்படி செய்தாலோ, ரோட்டார் சுழலத் துவங்கி பின்பு சுழன்று கொண்டே இருக்கும். எனவே துவக்கச் சுழற்றுதிறன்தர தூண்டுகோல் தேவை.



பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.