மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மோட்டாருக்கு மின்சப்ளை கொடுத்தும் மோட்டாரானது ஓடவில்லை என்ன காரணம்.

காரணங்கள்:

  • ஒரு ஃபேஸ் சப்ளையானது துண்டிக்கப்பட்டு நின்று இருக்கலாம்.


  • மிகக் குறைந்த அளவு மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் இருக்கலாம்.


  • அளவுக்கு அதிகமான சுமை இருப்பது. அதாவது ஓவர் லோட் இருப்பது.


  • கட்டுப்படுத்தும் கியர் அமைப்பானது பழுதடைந்திருத்தல்.


  • லோடிற்கு தேவையான துவக்கச் சுழற்று திறன் (ஸ்டார்ட்டிங் டார்க்) மிகவும் அதிகமாக இருத்தல்.


  • மோட்டாரின் உட்பகுதியில் இருக்கும் சுழலும் பகுதியான ரோட்டாரானது பழுதடைந்து இருக்கலாம்.


  • எதிர் இணைப்பு முறை. அதாவது ரிவர்ஸ் இணைப்பு ஏற்பட்டிருக்கலாம்.


  • பேரிங்கிற்கு சரியான அளவில் லூப்ரிகேசன் இல்லதிருத்தல்.


  • மோட்டாரின் உட்பகுதியில் இருக்கும் சுழலும் பகுதியான ரோட்டார் மற்றும் நிலையான பகுதி ஸ்டேட்டார் இவை இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியில் (அலைன்மெண்ட் சரியில்லாத காரணத்தினால்) பேரிங்கானது பிடித்துக் கொண்டிருத்தல்.

பெருப்பாலும் இந்தக் காரணத்தினால் தான் மோட்டரானது மின்சப்ளை கொடுத்தும் ஓடாததற்கு காரணம் ஆகும். இதை எப்படிநிவர்த்தி செய்தல் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.