மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மின்சாரமும் காந்தமும்


மின்சாரத்தை பயன்படுத்தி காந்தம் உண்டாக்கலாம். காந்தத்தை பயன்படுத்தி மின்சாரத்தை உண்டாக்கலாம். ஒரு இரும்பு துண்டு அல்லது இரும்பு ஆணி போன்ற பொருளை எடுத்துக் கொண்டு அதில் சில நூறு சுற்றுகள் காயில் கம்பிகளை சுற்றி பிறகு காயில் கம்பியின் இரண்டு முனைகளிலும் மின்சாரத்தை செலுத்தினால் இரும்பு துண்டு காந்தமாக மாறிவிடும். காயில் கம்பியில் எனாமல் பெயிண்ட் பூசப்பட்ட செம்பு கம்பியாகும். மின்மோட்டார்களின் காயில்களுக்கு மின்சாரம் கொடுப்பதால் மின்மோட்டாரில் காந்தம் உண்டாகிறது. ஆகவே மோட்டாரானது சுற்றுகிறது.
மின்சாரமணி போன்றவற்றின் காயில்களுக்கு மின்சாரம் செல்லும் போது மின்சாரமணியில் காந்தம் உண்டாகி மணி அடிக்கிறது. ஆகவே மின்சாரத்தின் மூலம் காந்தம் உண்டாகிறது என்பதை அறியவும்.

காந்தம் மூலம் மின்சாரம்:
சாதாரண சைகிள் டைனமோக்களில் பார்க்கவும். அதன் உள்ளே ஒரு காந்த உருளை இருக்கும். காந்த உருளையை சுற்றிலும் காயில்கள் இருக்கும். சைக்கிள் சக்கரத்தின் மூலமாக இந்த காந்த உருளை சுற்றுகிறது. ஆகவே இதன் காயிலில் மின்சாரம் உண்டாகிறது. ஆகவே காந்தம் மூலம் மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்பதை அறியவும்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.