மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

மோட்டாருக்கு மின்சப்ளை கொடுத்தும் மோட்டாரானது ஓடதுவங்கவில்லை அதை எப்படி நிவர்த்தி செய்வது.

  • ஒவ்வொரு ஃபேசிலும் மின்சப்ளை உள்ளதா எனவும், மின்னழுத்தம் போதுமான அளவு உள்ளதா எனவும் அளந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
  • சுமையை குறைத்திட வேண்டும் அல்லது சுமையின்றி மோட்டாரை துவக்கி சரிபார்த்திட வேண்டும்.

  • கட்டுப்படுத்தும் கியரில் உள்ள முனைகள் சரியாக உள்ளனவா எனப் பார்க்க வேண்டும். 
  • மோட்டரின் உள்பகுதியில் உள்ள சிலிப் ரிங்ஸ் எனப்படும் வளையம் போன்ற அமைப்பு அதே  மோட்டரின் உள்பகுதியில் உள்ள பிரஷ் என்ற அமைப்புடன் நல்லபடியாக தொட்டு தொடர்ச்சியாக உள்ளதா எனவும் பார்க்க வேண்டும்.
  • மோட்டாரின் ரோட்டாரில் உள்ள  சிலிப் ரிங்ஸ் எனப்படும் வளையம் போன்ற அமைப்பு உடைந்துள்ளனவா எனப் பார்க்க வேண்டும். 
  • மோட்டரின் காயில் இணைப்புகளை சரிபார்க்க வேண்டும் . எதிர் இணைப்புகள் உள்ளதா எனவும் பார்க்க வேண்டும். (அதாவது ரிவர்ஸ் கனெக்சன்)
  • பேரிங்குகள் சரியாக உள்ளதா எனப்பார்க்க வெண்டும்.  சரியான அளவில் லூப்ரிகேசன் செய்ய வேண்டும். காற்று இடைவெளிகளை சுத்தப் படுத்தி எதுவும் அடைத்துக் கொண்டிருக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். 

இதையெல்லாம் நிவர்த்தி செய்தால் மோட்டாரானது நல்லபடியாக ஓடதுவங்கும். 

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.