மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

14] மின்னோட்டம்[current]



மின் ஊட்டம் இடம் பெயர்வதையே மின்னோட்டம் என்று சொல்லுகிறோம். ஓரழகு நேரத்தில் ஒரு புள்ளியை கடந்து செல்லும் மின் ஊட்டத்தின் அளவையே மின் ஓட்டத்தின் வலிமை ஆகும். கடத்தியில் நிகழும் மின் ஓட்டம், அதன் முனைகளுக்கிடையே ஏற்படும் மின் அழுத்த பேதத்தையும் பொறுத்தது.

இம் மின்னோட்டத்தி அளக்கப் பயன்படும் அலகு ஆம்பியர் ஆகும். மின்னோட்டங்களுக்கு இடையேயுள்ள காந்த விசைகளுக்கான விதிகளை முதன் முதலில் கண்டறிந்த விஞ்ஞானியான ஆம்பியரின் நினைவாகவே, மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆம்பியர்:

ஒரு வோல்ட் மின் அழுத்தமுள்ள கடத்தியின் இரு முனைகளுக்கு இடையில் ஒரு ஓம் மின்தடை இருக்குமானால் அதில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஒரு ஆம்பியர் ஆகும். ஆம்பியரை அடையாளமிட 'A ' என்னும் எழுத்தை உபயோகிக்கிறோம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.