மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

9] நேர் மின் ஓட்ட அமைப்பு [DC circuits ]


ஆதார விவரங்கள் [Basic concepts ]
மின்சாரம் என்பது ஒரு வகையான சக்தி.மின்சாரத்தை கண்ணால் காண இயலாது.ஆனால் அதனுடைய பல்வேறு செயல்களில் இருந்து உணர முடியும்.பொதுவாக சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.ஒரு சக்தியை மற்றொரு சக்தியாக மாற்ற முடியும். இதன் அடிப்படையில் மின்சக்தியானது,நமக்கு இயந்திர சக்தி, வெப்ப சக்தி, மற்றும் இராசாயன சக்தி,அணு சக்திகளில் இருந்து கிடைக்கிறது. இதே போல் மின்சக்தியையும் நாம் இயந்திர சக்தியா ,ஒலி சக்திய,ஒளி சக்தியாக,வெப்ப சக்தியாக,இராசாயன சக்தியாக மாற்றலாம்.

ஏறத்தாள கி.மு. 600 -க்கு முன்னமேயே, கிரேக்கர்கள் ஆம்பர் என்னும் ஒரு வகை பழுப்பு நிற இருக்கியா கோந்தை, ஒரு சிறிய பட்டுத் துண்டிலோ, அல்லது கம்பளி துண்டிலோ தேய்த்தால் அது காகிதம்,வைக்கோல்,துரும்பு போன்ற இலேசான பொருள்களை ஈர்ப்பதை கண்டறிந்தனர்.


பின்னர் கி.மு.1600 இல் கில்பர்ட் என்னும் பிரிட்ஸ் விஞ்ஞானி இது போன்ற ஈர்க்கும் தன்மைக்கு மின் இயல் [ELECTRICITY ] என்று பெயரிட்டார். ஆம்பரை கிரேக்க மொழியில் ஏலேக்ட்ரோன் என்று அழைப்பார்கள். இதை ஒட்டியே ஆங்கிலத்தில் மின் இயலுக்கு electricity என்று பெயர் வந்தது. பின்னர் படிப்படியாக முன்னேற்றம் கண்டு, இன்று மின் இயல் இவ்வுலகத்தில் மிக உன்னத நிலையை அடைந்திருக்கிறது. 

மின் இயலை இரு கூராக பிரிக்கலாம்: 
௧. நிலை மின்னியல் [static electricity]
௨. இயங்கு மின்னியல் [dynamic electricity ]

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.