மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

3] எப்படி நம் வீட்டிற்கு 3பேஸ், சிங்கில்பேஸ் supply வருகின்ரது.(பாகம்-1)


Electrical supply ஆனது வீடு மற்றும் ஒரு சிறிய தொழிற்சாலை ஆகியவற்றிற்கு செல்லும் போது 3பேஸ் 4வயர் சிஸ்டம் அல்லது சிங்கில் பேஸ் 2வயர் சிஸ்டமாக செல்கிறது.

3பேஸ் 4வயர் சிஸ்டத்தில் 400v to 415v வரையிலும் சிங்கில் பேஸ் 2வயர் சிஸ்டத்தில் 230v வரையிலும் செல்லும்.

பொதுவாக ஒரு ஏரியாவிற்கு suply அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு அருகில் distribution sub-station கண்டிப்பாக அமைந்திருக்கும்.[இங்குதான் நாம் போய் மின்சாரக் கட்டனம் செலுத்துவோம்(EB-office)].

ஒரு வீட்டில் அதிகமான பவரை பயன்படுத்தினால் அதாவது மோட்டார்,AC போன்ற அதிக பவரை எடுக்கும் சாதனங்களை பயன்படுத்துவதால் அவர்களுக்கு 3பேஸ் supply தேவைப்படுகின்றது.[400v to 415v].


சாதரணமான வீடுகளில் அதாவது குறைவாக பவரை பயன்படுத்தும் வீடுகளில் சிங்கில் பேஸ்supply போதுமானதாக உள்ளது.[230v 2wire system].

இங்கு நான் குரிப்பிட்டுள்ள supply அனைத்தும் AC supply ஆகும்.[alternating current] AC supply என்பது அதன் அளவிலும் திசையிலும் மாறிமாறி கிடைப்பதாகும். அதாவது


இதை sine wave என்று கூறுவார்கள்.

இந்த distribution sub station-ல் அதிகப்படியாக 11kv or 33kv வரை வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இந்த distribution sub station அமைப்பில் high voltage, step down transformer, low voltage switchgear மற்றும் bus bars, low voltage fuse இவைகள் அனைத்தும் முன்பு சொன்ன 11kv or 33kv இவற்றை குறைத்து நம் வீட்டிற்குத் தேவயான 400v to 415v மற்றும் 230வோல்டேஜை கொண்டு வருவதற்காகப் பயன்படுகிறது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.