மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

1] ஜிபிஎஸ் எப்படி இயங்குகிறது?


நான் இதை ஒரு புத்தகத்திலிருந்து படித்தேன் நூலாசிரியர் சு.வேங்கடாசலம், மும்பை
 அவருக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

  Global positioning system என்பதன் சுருக்கமான பெயர்தான் GPS. இதில் 24 செயர்க்கைக்கோள்கள் பங்கு எடுத்துகொள்கின்றன இவை அமெரிக்க மிலிட்டரி அப்ளிகேசன்களுக்காக அவர்களுடைய U.S.Department of defence மூலமாக ஆகாயத்தில் விடப்பட்டன. 1980களில் இந்த ஜிபிஎஸ் சிஸ்டம் மற்ற மக்களுக்காகப் பயன்பட அளிக்கப்பட்டது.

ஜிபிஎஸ் செயர்க்கைக்கோள்கள் பூமியை ஒரு நாளில் இரண்டு முறை வலம் வருகின்றன. அவை தங்களுடைய தற்போதைய இடத்தை எல்லா வேளையிலும் சிக்னல்கள் மூலமாக அனுப்பிக்கொண்டிருக்கும். ஜிபிஎஸ் ரிசிவர்கள் இந்தத் தகவல்களை பெற்றுக்கொள்ளும். பிறகு சிக்னல்கள் எந்த நேரத்தில் trasmit செய்யப்பட்டன ,எந்த நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன ஒத்துப்பார்க்கும்.

அந்த இடைவெளி நேரத்தின் மூலம் ரிசிவருக்கு செயற்கைக்கோள் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று தெரிந்து விடும் . ஒரு ஜிபிஎஸ் ரிசிவர் 3 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைக்கோள்கள் மூலம் சிக்னல்கள் பெறுகிறது. பிறகு Triangulation என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ரிசிவர் இருக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட்டு விடும். இதை ஒரு எலெக்ட்ரானின் படமாக டிஸ்ப்ளே செய்து விடும்.

ரிசிவருக்கு குறைந்தபட்சம் 3 செயர்க்கைகொல்களிலிரிந்து சிக்னல்கள் தேவைப்படும்.இதன் மூலம் இரு பரிணாமத்தில் இடத்தை ,அதாவது latitude மற்றும் longitude  கணக்க்கிட்டுவிடும். 4 அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட செயர்க்கைகொல்கள் மூலம் சிக்னல்கள் கிடைத்தால் ரிசிவர் அது எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும்.

பயனாளரின் இடத்தை தெரிந்த உடன் ரிசிவர் வேறு பல விசயங்களையும் கணக்கிட முடியும். சராசரி வேகம் எந்தத்திசையில் செல்கிறது நீங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு உள்ள தூரம் போன்றவை. ஜிபிஎஸ் ஒரு நாளில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். வெயிலோ ,மழையோ ,மேகம் இருக்கிறதோ .இல்லையோ , ஒற்றைப்பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அது சென்னையாக இருந்தாலும் சரி ,சிகாகோவாக இருந்தாலும் சரி, எந்த இடத்திலும் இயங்கும்.

ஒரு விஷயத்தை மனதி கொள்ள வேண்டும். ரிசிவர் சிக்னல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்  என்பதால் என்பதால் வீட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தால் அது வேலை செய்யாது. தண்ணீரின் அடியிலும் சிக்னல்கள் கிடைக்காது. மற்றபடி நிலத்திலோ நீரிலோ ஆகயத்திலோ எங்கு வேண்டுமானாலும் பயன்படுதிக்கொள்ளலாம்.

இன்று ஜிபிஎஸ் ரிசிவர்கள் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள  எல்லா இடங்களுக்கும் வரைபடம் கிடைக்கின்றன. இவை இரண்டே சிடியில் வெளிவந்துள்ளது. தேவைப்பட்டும் படங்களை மட்டும் ஜிபிஎஸ் ரிசிவருக்கு டவுன்லோட் செய்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக நியுயார்க் செல்ல வேண்டும் என்றால் அந்த வரைபடத்தை மட்டும் ரிசிவரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

பிறகு ஒரு புது நகரத்தில் வழி தெரியாமல் திண்டாடவேண்டாம். பிரயாணத்தை தொடங்கும் இடத்தையும் போய்ச்சேரவேண்டிய இடத்தையும் கொடுத்துவிட்டால் போதும். அதுவே வழியை காட்டிவிடும்."வாயில் இருக்கிறது வழி " என்பது போக இன்று "ஜிபிஎஸ் வழி காட்டும் " என்று  கூரலாம்.

மேலும் தவறான பாதையில் நாம் சென்றாலும் நீங்கள் தவறான பாதையில் செல்கிரிர்கள் என்று சொல்லும் சிச்டம்களும் இன்று வந்துள்ளன. இவற்றை காரில் பொருத்திக் கொள்ளலாம். வழியில் சென்று கொண்டிருக்கும்  போது எமர்சன்சியாக மருத்துவமனைக்கு  செல்ல வேண்டும் அப்பொழுது அந்த இடத்தையும் இது காட்டும்.

மிலிட்டரி தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் இன்று ஒரு சராசரி குடிமகனுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.