மின்னியல் மற்றும் மின்னனுவியல் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளேன் | வாழ்க தமிழ் ! வளர்க மனிதநேயம் !

3] என்பார்வையில் DC மோட்டார்



  • பொதுவாகவே மோட்டார் என்பது மின் சக்தியை இயந்திர சக்தியாக மாற்றக்குடியாது .
  • மோடோரில் இரண்டு முக்கியமான பகுதி உள்ளது .
  1. ரோட்டார் 
  2. ஸ்டேடார்
  • இந்த படத்தில் இருப்பதுதான் ரோட்டார்  அதாவது சுற்றும் பகுதி ஆகும் .
  • நாம் ப்ருஷின் [brush ] வழியாக மின்சக்தி கொடுக்கும் போது இந்த ரோட்டாரில் பிளக்ஸ் [flux ] ஆனது உருவாகிறது ஸ்டேடாராக இருக்கும் காந்தத்தில் பட்டு இந்த ரோட்டாரானது சுற்ற ஆரம்பிக்கிறது .
-------------------------------------------------------------------------------------------------------------------

  • இதுதான் ஸ்டேடார் பகுதி ஆகும்.
  • இதில் இரண்டு காந்தங்கள் இருப்பதால் இதை நாம் இரண்டு போல் மோட்டார் என்று  கூரலாம்.
  • ஸ்டேடார் என்பது நிலையாக இருக்கும் பகுதி ஆகும் . இதுதான் மோட்டாரை சுற்றவைக்கிறது .  
---------------------------------------------------------------------------------------------------------------
  • இதுதான் ப்ருஷேஸ் [brush ] ஆகும் .
  • இதன் வழியாகத்தான் நாம் மின்சக்தி கொடுக்கிறோம் .
  • இது இல்லைஎன்றால் மோட்டாரை இயக்குவது மிகவும் கடினம் ஆகும். 
-------------------------------------------------------------------------------------------------------------------------


  • நாம் ஒரு மோட்டார் எப்படி இயங்குகிறது  என்று செதுபார்க்கலாம் .
  • ஒரு பாட்டரி காந்தம் இரண்டு ஊக்கு ஒரு சுருள் கையில் இவற்றை எடுத்துக்கொண்டு படத்தில் உள்ளதுபோல் செய்து பார்க்கலாம் .
  • காந்தத்தில் ஏற்படும் மாற்றத்தால் சுருள் சுற்றுவதை நாம் காணலாம் .
  • இதிலிருந்து மோட்டார் சுற்றும்  விதத்தை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம் .
 ------------------------------------------------------------------------------------------------------------

  •  இதே மோட்டாரை மின்சக்தி உற்பத்தி இயந்திரமாகவும் பயன்படுத்தலாம் .
  • ஒரு LED  பல்பை ப்ருஷில் [brush ] இனைத்து மோட்டாரின் ஷாப்டை நம்  கைகளால் சுற்றிவிட்டால்  LED  பல்பானது எரியும் .
  • இதிலிருந்து மின்சக்தி இயந்திரம்[generator] இயங்கும் விதத்தை நாம் பார்க்கலாம்.

பிரபலமான இடுகைகள்

நாம் அனைவரும் கடைபிடிப்போம்

1.இரண்டு காரியங்களில் மனிதன் ஒருபோதும் கோபப்படக் கூடாது; தன்னால் தவிர்க்க முடிந்ததற்கும், தவிர்க்க முடியாததற்கும்.

2.காலத்திற்கு ஏற்ற சொல்லானது - கவலையைக் குறைக்கிறது.

3.உழைப்பு - துக்கம் - மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றும் இல்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.

4.உன்னைப் புண்படுத்துவது எதுவென்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எதுவென்பது உனக்குத் தெரியும்.
பணிவான சொல் - பாதையை எளிமையாக்குகிறது.

5.துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்து விடு, ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.

6.தொடக்கத்தினை விட முடிவினைப் பற்றி அதிகமாகச் சிந்தனை செய்.

7.தைரியப்படுத்துவது ஒருவனுக்குச் செய்யும் உதவியில் மூன்றில் ஒரு பங்காகும்.

8.ஒவ்வொரு தடவையும் நீ ஒருவனை மன்னிக்கும் போது, அவனைப் பலவீனப்படுத்துகின்றாய்; உன்னைப் பலப்படுத்துகிறாய்.

9.பேராசை முடிகின்ற இடத்தில் சந்தோஷம் தொடங்குகிறது.

10.பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.

11.தன் நடத்தை அளவுக்கே - ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கின்றான்.

12.போவது சரியான பாதையாக இல்லாத போது - வேகமாக ஓடுவதால் என்ன பயன் ?

13.சரியான சமயத்தில் உதவி செய்கிறவன் இருமடங்கு உதவி செய்கிறான்.